2023 ஐசிசி ஆண்களுக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் பங்கேற்பதற்காக சிம்பாப்வேயின் புலவாயோவில் இலங்கை அணி தங்கியுள்ள ஹோட்டலில் செக்-இன் செயல்பாட்டில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான பின்வரும் தெளிவுபடுத்தலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கியுள்ளது.
இலங்கை அணியினர் இன்று (நேற்றுமுன்தினம்) நண்பகல் ஹோட்டலுக்கு வந்துள்ளனர், நுழையும் நேரத்தில், இலங்கை அணிக்கு சற்று முன்னதாக வந்த மற்றொரு தேசிய கிரிக்கெட் அணி, “செக் இன்’ செய்யும் பணியில் இருந்தது.
இந்த சூழ்நிலையில் சில இலங்கை தேசிய அணி வீரர்கள் “செக்-இன்” செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
எவ்வாறெனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த விடயத்தை ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்ததையடுத்து, குறுகிய காலத்திற்குள் சிக்கலை சரிசெய்ய முடிந்ததாக தெரிவித்துள்ளது.