நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

2 months ago
Sri Lanka
aivarree.com

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் வேளையில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டை அண்மித்து ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலைமை தீவிரமடைந்துள்ளமையினால் மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.