03 மாவட்டங்களில் நாளை (04) சுனாமி ஒத்திகையை நடத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் திட்டமிட்டுள்ளது.
இந்த விடயத்தினை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பாராளுமன்றில் இன்று வெளிப்படுத்தினார்.
இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையை உள்ளடக்கிய திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.