35 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு

7 months ago
Sri Lanka
aivarree.com

35 கிலோவுக்கும் அதிகம் எடை கொண்ட ‘ஹஷிஸ்’ போதைப்பொருள் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

ஒருகொடவத்தை, கொள்கலன் முனையத்தில் கொள்கலன் ஒன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி 42 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த மீட்டு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.