அரச கண்காணிப்பிலிருந்த கணிசமான அளவு நெல் மாயம்

7 months ago
aivarree.com

குருணாகலில் அரசுக்கு சொந்தமான இரு நெல் களஞ்சியசாலைகளிலிருந்து 700,000 கிலோ கிராம் நெல் கையிருப்பில் கணிசமான அளவு குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு குறைவடைந்த நெல்லின் பெறுமதியானது 65 – 70 மில்லியன் ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு கணிசமான அளவு நெல் காணாமல் போயுள்ளமை உள்ளூர் விவசாய மற்றும் நிர்வாகத் துறையினரிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.