2025 ஆம் ஆண்டு புதிய சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளுக்கு அமைய புதிய சொத்து வரி நடைமுறைப்படுத்தப்படும்.
உத்தேச சொத்து வரியானது 2025 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கும்.
விரிவான பகுப்பாய்வின் பின்னரே இந்த சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும்.
இது கணிசமான எண்ணிக்கையிலான சொத்துக்களை வைத்திருக்கும் நபர்களை இலக்கு வைத்தே அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.