பதவி பெற்ற அதேநாளில் பதவி விலகிய ராஜாங்க அமைச்சர்

4 months ago
Sri Lanka
aivarree.com

பெருந்தோட்டக் கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த கடந்த 19ம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அன்றைய தினமே அவர் அந்த பதவியில் இருந்து விலகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விடயங்களுக்குமான விசேட வர்த்தமானி அறிவிப்புகளை ஜனாதிபதியின் செயலாளர் கடந்த 29ம் திகதிக்கு திகதியிட்டு வெளியிட்டுள்ளார்.

அவரது பதவி விலகலுக்கான காரணம் சொல்லப்படவில்லை.

எனினும், அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தியமைக்காக அவர் சர்ச்சைக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தமானியை பார்வையிட

G 41359 (E) I (I) Appointments by President New.indd 2024.02.02.indd (documents.gov.lk)