தமிழ் பொது வேட்பாளரை களம் இறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும் – சிறீதரன்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

18 இலட்சம் தமிழ் மக்களின் வாக்குகள் உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நாதன் குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே குறித்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலத்திற்கு காலம் ஜனாதிபதி தேர்தலின் போது பல வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கிய போதும் சிலர் வெற்றி பெற்றார்கள் .

எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் அரசியல் கொள்கைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தேவை என்பது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.