காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 5 வயது சிறுமி திடீர் மரணம்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

இன்று அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஆவரங்கால் பகுதியில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிகா (வயது 05) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமிக்கு கடந்த திங்கட்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் காய்ச்சல் சுகமானது.

பின்னர் வெள்ளிக்கிழமை மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மீண்டும் அச்சுவேலி வைத்தியசாலையில் சிறுமிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

பின்னர் திடீரென இன்றையதினம் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.