பல மாதங்களாகக் குடிநீர் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகர்வோருக்குத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) நீர் விநியோகத்தைத் துண்டித்துள்ளது.
கட்டணங்களைச் செலுத்தாத உள்நாட்டு நுகர்வோர், வணிகங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் உட்பட 15,000 பேர் மீது வழக்குகளைப் பதிவு செய்யவும் NWSDB நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
NWSDB க்கு செலுத்த வேண்டிய மொத்த கட்டண நிலுவைத் தொகை சுமார் 8.4 பில்லியன் ரூபாவாகும்.
இதன் காரணமாக NWSDB தற்போது கடுமையான நிதி சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் சபை கூறியுள்ளது.