ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் 01.1 R பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற விபத்தில் இரு ரஷ்யப் பிரஜைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறை – கடவத்தை பகுதியிலிருந்து பயணித்த லொறி ஒன்றும், குறித்த குழுவினர் பயணித்த வேன் ஒன்றும் மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த வேன் சாரதி 25 வயதுடையவர் என்பதுடன், ரஷ்ய பெண்ணும், ஆணும் 59 வயதுடையவர்கள் ஆவர்.
இந்நிலையில் காயமடைந்த மூவரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.