தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த வாரம் அரசாங்கத்துடன் இணையவிருப்பதாக சமுகவலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன.
எதிர்வரும் நான்காம் திகதி பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் போது, எதிரணியில் இருந்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த குழுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதுதொடாபாக அய்வரி செய்திகளுக்கு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் பழனி திகாம்பரம், அவ்வாறான தகவல்களில் உண்மையில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, எதிர்க்கட்சித் தலைவா சஜித் பிரேமதாசவை பலப்படுத்தும் வகையில் அவருடன் இருப்பதாகவும், அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் இல்லை என்றும் கூறினார்.