யாழில் போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் ஒருவர் கைது

1 year ago
Sri Lanka
aivarree.com

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளை இளைஞர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

பளை பகுதியில் வைத்து கடந்த வாரம் ஒருவர் 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் அவருக்கும், தற்சமயம் கைதான நபருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறெனினும், போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் கைதான நபர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.