கொழும்பு, தெஹிவளை வைத்தியசாலை வீதியில் ஒருவர் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் மீது சட்டவிரோத ஒன்றுகூடல் மற்றும் கொலையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் கிண்ணியா, நிலாவெளி, அவிசாவளை, களுத்துறை, பண்டாரகம, காலி, பேருவளை, கந்தளாய், அட்டன் மற்றும் ருவன்வெல்ல பகுதிகளைச் சேர்ந்த 19 – 33 வயதுடையவர்கள் ஆவர்.