புதையல் தோண்டிய லெப்டினன் கேர்ணல், தேரர் உட்பட நால்வர் கைது

1 year ago
Sri Lanka
aivarree.com

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரலக்குளம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் நேற்று விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

லெப்டினன் கேர்ணல் அடங்கலான மூன்று இராணுவத்தினரும், தேரர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

வவுணிதீவு விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு இணங்கவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதின் போது சந்தேக நபர்கள் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய உபகரணங்களையும், ட்ரக் வண்டியொன்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.