வெலிஓயா ஆற்றில் ஒருவர் சடலமாக மீட்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

பதுளை, கந்தகெட்டிய 3 ஆம் பிரிவு வெலிஓயா ஆற்றில் 44 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சடலம் தற்சமயம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.