நாளை 20 மணித்தியால நீர் வெட்டு!

11 months ago
Sri Lanka
aivarree.com

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் 20 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (13) காலை 10.00 மணி முதல் புதன்கிழமை (14) காலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரகபிட்டிய, சித்தாமுல்ல, ஆரவல, ரத்மல்தெனிய, மஹரகம-பிலியந்தல வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மடவளை வீதி, பொகுந்தர வீதி மற்றும் அது தொடர்பான அனைத்து பக்க வீதிகளும் நாளை நீர் விநியோகம் தடைப்படும்.

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.