லண்டன், ஓவலில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு மெதுவான ஓவர் பரிமாற்றத்தை பேணியமைக்காக பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாளில் இந்தியா 209 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே, இந்தியா தனது மெதுவான ஓவர் விகிதத்திற்காக முழு போட்டிக் கட்டணங்களையும் இழக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அவுஸ்திரேலியாவும் அவர்களின் போட்டி கட்டணத்தில் 80 சதவீதத்தை அபராதமாக இழக்க நேரிட்டது.
நேரக் கொடுப்பனவுகள் கருத்தில் கொள்ளப்பட்ட பின்னர் இந்தியா இலக்கை விட ஐந்து ஓவர்கள் குறைவாக இருப்பதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது, அதே நேரத்தில் அவுஸ்திரேலியா நான்கு ஓவர்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதனிடையே, இந்திய வீரர் ஷுப்மான் கில், டெஸ்டின் நான்காவது நாளில் அவரை ஆட்டமிழக்க செய்வதற்கான முடிவை விமர்சித்ததற்காக, இளம் தொடக்க ஆட்டக்காரருக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் மேலும் 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.