அட்டன், பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட 05 ம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் சிறித்தையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த தொழிலாளி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (24) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் நல்லதன்னி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.