வெளிநாடுகளில் வேலை தேடுகின்ற இலங்கையர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனையில் பதிவு செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுடன் மாத்திரமே தங்களது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு அங்கீகாரம் பெற்ற முகவர்கள் ஊடாக பணத்தை செலுத்தி வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்வோர் தொடர்பிலான பொறுப்புகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை கொண்டுள்ளது.
மாறாக ஏமாற்று வேலைவாய்ப்பு நிலையங்களை அணுகியவர்கள் தொடர்பாக பொறுப்புக்கூற கடமைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.