ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்தில் அரசாங்கத்தின் 5000 ரூபாய் விசேட கொடுப்பனவும் சேர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
ஜனவரி மாதத்திற்கான விசேட கொடுப்பனவு நிலுவை பெப்ரவரி மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் ஜகத் டி.டயஸ் அறிவித்துள்ளார்.
புலம்பெயர் ஓய்வூதியம் பெறுவோர் தவிர அனைத்து அரச ஓய்வூதியம் பெறுவோரும் இக் கொடுப்பனவை பெற உரித்துடையவர்களாவர்.