இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தீர்வு காணுமாறு கோரி அகில இலங்கை கடற்றொழில் சம்மேளனம் இன்று கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
போராட்டத்தின் போது மீனவர்கள் மீன்பிடித்துறை அமைச்சரைச் சந்திப்பதற்காக அமைச்சு வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட போது முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, சம்மேளனத்தின் 5 பிரதிநிதிகள் அமைச்சரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.