நாட்டு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட்ட 03 இந்திய இழுவை படகுகளை கடற்படை கைப்பற்றியுள்ளது.
மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினால் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
கைப்பற்றப்படும் இந்திய படகுகள் நாட்டில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கு இந்திய மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.