வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

2 weeks ago
Sri Lanka
aivarree.com

வளிமண்டலவியல் திணைக்களம் 11 மாவட்டங்களில் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி மேற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று (30) இரவு 10.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.