வடகிழக்கு லண்டனில் வாள் ஏந்திய நபரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தையடுத்து 36 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனரீதியில் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.