வஸ்கடுவ பகுதியில் இன்று (29) அதிகாலை ரயிலுடன், சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வஸ்கடுவ பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையினை குறித்த பஸ் கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினால் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதுடன், ரயிலும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
விபத்து காரணமாக கடலோர மார்க்கமூடான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.