2ஆம் திகதி வெளிவரும் O/L பெறுபேறு

5 months ago
Sri Lanka
aivarree.com

2022ஆம் ஆண்டுக்கான கபொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் வெளியீட்டுத் திகதி உறுதியாகியுள்ளது. 

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அய்வரி செய்திகளுக்கு இந்தத் தகவலை வழங்கினார். 

இதன்படி டிசம்பர் மாதம் 2ஆம் திகதி பரீட்சை முடிவுகள் வெளியாகவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

பரீட்சை பெறுபேறுகளை தரவேற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

பெறுபேறுகள் வெளியானதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்க்க முடியும்.