அபராதம் விதிப்பேன் – ஜேர்மனியில் அறிவிப்பாளரை விளையாட்டாய் மிரட்டிய ரணில் (வீடியோ)

8 months ago
Sri Lanka
aivarree.com

ஜேர்மனியில் நடந்த பேர்லின் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளருக்கு அபராதம் விதிக்கப்போவதாக விளையாட்டாக மிரட்டும் காணொளி வைரலாகியுள்ளது.

ஜனாதிபதியை அதிமேதகு என்று விழிப்பதற்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டிய குறித்த அறிவிப்பாளர், எனினும் தாம் அவரை அதிமேதகு என்றே அழைப்பதாக அறிவித்திருந்தார்.

அவரை விளையாட்டாக கண்டித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்கு அபராதமாக மேலும் சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ள போவதாக கூறினார்.