வங்கிகளில் பெரும் நெருக்கடி

7 months ago
aivarree.com

இலங்கையில் உள்ள வங்கிகள் பெரும் ஆளணி பற்றாக்குறையை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 10,000 வங்கி ஊழியர்கள் தொழிலில் இருந்து விலகி சென்றுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் அடுத்த ஆண்டு இந்த நிலைமை மேலும் மோசமடையும் என அஞ்சப்படுகிறது.

ஏற்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.