ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 63 சதவீதமான மக்கள் காலநிலை மாற்றத்தை ‘பூகோளத்தின் அவசரநிலையாக இனம் கண்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர் யுவதிகளே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் இது தொடரபில் மக்கள் பிரநிதிகளின் பங்களிப்பு போதியளவில் இல்லையென்று இளம் தலைமுறையினர் கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிய பசுபிக் பிராந்திய இளைஞர்கள் போரத்தின் அமைச்சர்கள் மற்றும் சூழலியல் அதிகாரிகளுக்கான 5 ஆவது போரம் நேற்று (01) ஐ.நா அலுவலக முன்றலில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்
ஆசிய பசுபிக் பிராந்தியமானது அதன் சுற்றாடல் பிரச்சினைகளைக் கையாள இளைஞர்களின் பங்களிப்பை அவசியமாகவும் அவசரமாகவும் வேண்டி நிற்கின்றது, அந்த வகையில் இந்த போரம் ஒரு மைல் கல்லாக அமைகின்றது.
நிலை பேராண்மை அற்ற உற்பத்தி மற்றும் பயன்பாடு என்பனவற்றால் ஏற்பட்டுள்ள சுற்றாடல், சமூக, மற்றும் பொருளாதார பிரச்சினைகளை நாடுகள் எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.