யாழ். தென்மராட்சி – மீசாலை மேற்கு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனந் தெரியாத குழுவினர் அங்கிருந்த பொருட்களுக்கு தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
இதனால், வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி மற்றும் வீட்டு தளபாடங்கள் தீக்கிரியாக்கப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.