பாடசாலை விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

7 months ago
Sri Lanka
aivarree.com

நாட்டில் பரவலாக சீரற்ற காலநிலை நிலவுவதன் விளைவாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும், மண்சரிவு அபாயங்களும் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக கேகாலை, கண்டி, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாத்தறை மாவட்டத்தின் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை நிலவுகின்ற நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் பாடசாலைகள் மூடப்படுமா? என்று கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமாரை அய்வரி செய்திகள் தொடர்பு கொண்டு கேட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், இதுகுறித்த தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் அந்தநந்த மாவட்ட கல்வி வலய பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.