நாட்டிலுள்ள 72 சுகாதாரதுறை சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று நிதியமைச்சுடன் அந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடி இருந்த போதும், அது வெற்றியளித்திருக்கவில்லை.
அண்மையில் சுகாதார பணியாளர்கள் பணி நிறுத்தத்தை மேற்கொண்ட போது, முப்படையினரின் சுகாதார வல்லுனர்கள் ஈடுபடுத்தப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.