போதைக்கு அடிமையான மகனை கொலை செய்த தந்தை

3 months ago
Sri Lanka
aivarree.com

போதைப் பொருளுக்கு அடிமையான 30 வயதான தமது மகனை, தந்தையே(60) கொலை செய்த சம்பவம் ஒன்று, கும்புக்கெட்டிய – வெல்கால பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மகன் நாளாந்தம் போதைப் பொருளுக்காக பணம் கேட்டு, தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவ தினமான பெப்ரரி மாதம் 18ம் திகதியும் அதேபோன்ற வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தந்தை கோபத்தில் மகனை சுத்தியலைக் கொண்டு தாக்கியதில் அவர் மரணித்தார்.

இதனை அடுத்து தந்தையை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.