மின்சாரசபையை தனியாருக்கு விற்பனை செய்யும் எண்ணம் இல்லை – காஞ்சன

2 months ago
Sri Lanka
aivarree.com

மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பாராளுமன்றில் இன்று எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

இது குறித்து மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாவது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அபிவிருத்தி பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறவில்லை. நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையினையே இடைநிறுத்துமாறு கூறினார்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் வரை நாட்டின் வளங்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்வதனை நிறுத்துமாறே அவர் கோரியிருந்தார்.

மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்தம் முன்னெடுக்கப்படும்.

எவ்வாறாயினும், மின்சாரசபையினை தனியாருக்கு விற்பனை செய்யும் எண்ணம் இல்லை என கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.