பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை (29) நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த குண்டு வெடிப்பில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மசூதிக்கு அருகில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்திலேயே இந்த பயங்கர வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
மாவட்ட சுகாதார அதிகாரிகள் Dawn.com செய்திச் சேவையிடம் உயிரிழப்புகள் விபரத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் ஒரு பொலிஸ் உயர் அதிகாரியும் உள்ளடங்குவதாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.