ஹரக் கட்டாவும் குடு சலிதுவும் 90 நாட்கள் தடுப்பில்

1 year ago
Sri Lanka
aivarree.com

இன்று காலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பிரபல பாதாள உலக குற்றவாளிகளான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன மற்றும் குடு சலிது என்ற சலிந்து மல்ஷித குணரத்ன ஆகிய இருவரும் CIDயால் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிகமவைச் சேர்ந்த 32 வயதான நதுன் சிந்தக மற்றும் 27 வயதான சலிந்து மல்ஷித ஆகியோர் அண்மையில் மடகஸ்கரில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக ஏஎஸ்பி தலைமையிலான சிஐடி குழு சனிக்கிழமை மடகாஸ்கருக்கு புறப்பட்டது.

மடகாஸ்கரின் பாதுகாப்பு அதிகாரிகள் மார்ச் 1 அன்று மடகாஸ்கரில் உள்ள இவாடோ சர்வதேச விமான நிலையத்தில் ஹரக் கட்டா மற்றும் குடு சலிடு உட்பட 8 பேரை கைது செய்தனர்.