வெளிநாடு செல்கிறீர்களா? | வெளியேறல் தீர்வை கட்டணம் அதிகரிப்பு  

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் இருந்து வெளியேறுகின்றவர் விமான நிலையத்திலும் துறைமுகத்திலும் செலுத்த வேண்டிய தீர்வை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்கின்றவர்கள் 60 டொலர்களை தீர்வைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கொழும்பு சர்வதேச விமான நிலையம், இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம் விமான நிலையங்களின் ஊடாக வெளியேறுகின்றவர்கள் 30 டொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கடல்மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேறுகின்றவர்களும் 60 டொலர்களை திர்வையாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பிலிருந்து மத்தலை சர்வதேச விமான நிலையம் இரண்டு ஆண்டுகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதுடன், இரத்மலானை விமான நிலயத்தில் மார்ச் 26ம் திகதி முதலும், யாழ்ப்பாண விமான நிலையத்தில் ஜுலை 11ம் திகதி முதலும் இந்த வரி அமுலாக்கப்படும்.