உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களது எரிபொருள் ஒதுக்கத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், எரிபொருள் ஒதுக்கத்தை அதிகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையில் எரிபொருள் கோட்டாவை உயர்த்தினால் பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.