வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

தொடரும் சீரற்ற காலநிலையினால் சாரதிகள் வீதியின் தன்மையை கருத்திற் கொண்டு வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக நெடுஞ்சாலைகள் மற்றும் மலைப்பாதைகளில் வாகனம் செலுத்தும் போது சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது பிரேக்கிங் தொழிற்பாடு தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

அதேபோல் மலைப்பாதைகளில் வாகனம் செலுத்தும் போது பனி மற்றும் மண்சரிவு குறித்து அதிக கவனத்துடன் சாரதிகள் செயற்பட வேண்டும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.