இந்தியாவிலிருந்து மேலும் 20 இலட்சம் முட்டைகள் அடுத்த வாரம் இறக்குமதி செய்யப்படும் என்று அரசு வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி முட்டை விநியோகம் நேற்று (30) ஆரம்பமாகியதாகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பெருமளவில் பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
35 ரூபா விலையில் முட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆசிறி வலிசுந்தர கூறியுள்ளார்.
எவ்வாறெனினும் நாட்டில் முட்டையின் ஒட்டுமொத்த விலை குறைக்கப்படும் வரை தமது உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.