இலங்கை, வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை எதிர்நோக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பாரிய மின்வெட்டு ஏற்படும்.
இதனைத் தவிர்க்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.