இலங்கையில் ஒருசில வகை எரிபொருள் விலைகளை குறைப்பது குறித்து ஆராயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்துக்கு அமைவாக உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைப்பதற்கு ஆலோசிக்கப்படுகிறது.
எனினும் இன்னும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் எரிபொருள் விலை குறைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.