மின்வெட்டை அமுலாக்க இன்று முதல் எதிர்வரும் ஃபெப்ரவரி 17ஆம் திகதி வரையில் அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவரால் இலங்கை மின்சார சபைக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே ஃபெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரையில் மின்வெட்டுக்கான அனுமதியை கோர வேண்டாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையை அறிவுத்தியுள்ளது.