அஞ்சல் மூல வாக்குப்பதிவுகள் ஃபெப்ரவரி மாத இறுதி வாரத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கான வர்த்தமானி இன்னும் வெளியிடப்படவில்லை.
எவ்வாறாயினும், அஞ்சல் வாக்களிப்புக்கான திகதியை தீர்மானிக்கும் நடவடிக்களில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதாக, அதன் பேச்சாளர் ஒருவர் அய்வரிக்கு தெரிவித்தார்.
பெரும்பாலும் ஃபெப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் அஞ்சல் வாக்களிப்பு இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக அவர் அநாமதேயமாக அய்வரியிடம் குறிப்பிட்டார்.