மாணவர்களுக்கான ரயில்வே திணைக்களத்தின் செய்தி

11 months ago
Sri Lanka
aivarree.com

பாடசாலை மாணவர்களுக்கான ரயில்வே மாதாந்த பருவச் சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த கால அவகாசம் எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.