2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் விளையாடுவதற்காக 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை சிம்பாப்வே நோக்கி புறப்பட்டுள்ளது.
தசுன் ஷானக்க தலைமையிலான குழுவினர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் சமய அனுஷ்டானங்களில் கலந்து கொண்ட பின்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து சிம்பாப்வே நோக்கி புறப்பட்டனர்.
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்றுக்கான ஷானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
தகுதிச் சுற்று போட்டிகள் எதிர்வரும் ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை சிம்பாப்வேயின் ஹராரே மற்றும் புலவாயோ இடையே நான்கு இடங்களில் நடைபெறும்.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான இறுதி இரண்டு இடங்களுக்காக 10 அணிகள் தகுச் சுற்றில் போட்டியிடுகின்றன.