மனிதர்கள் காணாமல் போகும் மர்ம இடமாக மாறும் பலாங்கொடை சமனலவத்த

1 year ago
Sri Lanka
aivarree.com

பலாங்கொடையில் உள்ள சமனலவத்தை பகுதியில் 38 வயதான நபர் ஒருவர் கடந்த எட்டாம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

அதேநேரம் கடந்த 3ம் திகதி 45 வயதான நபர் ஒருவர் காணாமல் போன நிலையில், இதுவரையில் அவர் குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்க பெறவில்லை.

தொலைப்பேசி அழைப்பு ஒன்று கிடைத்தப் பின்னர் வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 9 வயதான சிறுவன் ஒருவர் இதே பகுதியில் காணாமல் போய் இருந்த நிலையில், இதுவரையில் அவர் குறித்த விபரங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த சம்பவங்கள் தொடர்பாக பலாங்கொடை பொலிசாரின் விசேட குழு ஒன்று விசாரணைகள் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.