பேருவளையில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து எச்சரிக்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

பேருவளையில் நில அதிர்வுகள் மீண்டும் ஏற்பட்டால், அது அதிக வலுமிக்கதாக இருந்தால் அதனை தீவிரமாக அவதானிக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் பேராசிரியர் கபில தஹாநாயக்கவை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் இதனைத் தெரிவித்துள்ளது.  

எதிர்வரும் நாட்களில் மேலும் அதிர்வுகள் ஏற்பட்டால், அதன் அளவு அதிகரித்தால், அது ஒரு ஆபத்தான அறிகுறியாகும்,” என்று அவர் கூறினார்.

கடந்தப் வியாழன் அன்று ஏற்பட்ட 3.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் தீவிரமானது அல்ல.  

இந்த வகையான நடுக்கம் உலகின் எந்தப் பகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.