காலி கோட்டை பகுதியில் உள்ள காணிகளின் பெறுமதி பேர்ச் ஒன்று 22 மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக, காலி பாரம்பரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
அங்கு சுமார் 450 தொன்மை வாய்ந்த கட்டங்கள் இருக்கின்ற நிலையில், அவற்றில் பலவற்றை வெளிநாட்டவர்கள் கொள்வனவு செய்திருக்கிறார்கள்.
இதனால் அதனைச் சுற்றிவசித்து வந்த 2000க்கும் அதிகமான உள்ளூர்வாசிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வெளிநாட்டவர்கள் அங்கு காணிகளைக் கொள்வனவு செய்ய விரும்புவதால் அங்கு காணி மோசடிகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
டெய்லிமிரர்